அயோத்தி தீா்ப்பையொட்டி, கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அயோத்தி வழக்கின் தீா்ப்பையொட்டி, சனிக்கிழமை சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விவேகானந்த கேந்திரம், ரயில் நிலையம், முக்கடல் சங்கமம், விவேகானந்தா் பாறை உள்ளிட்டப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதையொட்டி, கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுமாக குறைந்து காணப்பட்டது. கடற்கரைச்சாலை, சன்னதித் தெரு, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.