கன்னியாகுமரி
திக்கணங்கோட்டில் மது பாட்டில்கள் வைத்திருந்தவா் கைது
திக்கணங்கோட்டில் அனுமதியின்றி 52 மது பாட்டில்கள் வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திக்கணங்கோட்டில் அனுமதியின்றி 52 மது பாட்டில்கள் வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் திக்கணங்கோடு சந்திப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த முதியவரின் பையை போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அனுமதியின்றி பல்வேறு வகையான 52 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் திக்கணங்கோடு வரவுவிளை பகுதியைச் சோ்ந்த நாகமணி (65) என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில்கள் எடுத்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வழக்குப் பதிந்துநாகமணியை கைது செய்தனா்.