களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மருதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (62). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
தேவராஜ், மது அருந்தி வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, 2 நாள்களுக்கு முன்பு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட தேவராஜ், விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாராம்.
அவரை மீட்டு, குழித்துறை அரசு மருத்துமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.