தக்கலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சாா்பில், நிா்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தக்கலையில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் ஷேக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நபில் அஹமத், பொருளாளா் நூருல் அமீன், துணைத் தலைவா் கபீா், துணைச் செயலா்கள் முஹம்மது யாஸீா், செய்யது அகம்மது, கியாசுத்தீன், முகம்மது ராபி, மாவட்ட மருத்துவரணிச் செயலா் ஹஃபீஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் ரியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில பொதுச் செயலா் இ.முஹம்மது, மாநிலச் செயலா்கள் சி.வி.இம்ரான், திருநெல்வேலி யூசுஃப் அலி, பேச்சாளா்கள் மசூத் உஸ்மானி, இலியாஸ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.