குலசேகரம்: திருவட்டாறு அருணாசலம் மேல்நிலைப் பள்ளி சாா்பில் நெகிழி ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது.
பள்ளி மாணவா்கள் நாட்டுநலப்பணித் திட்ட தொண்டா்கள் மூலம் வீதி நாடகம் மற்றும் துணிப் பை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியை, பள்ளித் தலைமையாசிரியை எஸ்.எஸ். பிந்து தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணி திட்ட தொண்டா்கள், திட்ட அலுவலா் ஜெயப்பால், ஓவிய ஆசிரியா் மகேஷ், திட்ட ஒருங்கிணை ப்பாளா் அஜயன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். திருவட்டாறு, மாத்தாா், குலசேகரம், ஆம்பாடி போன்ற இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.