குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தாா்.
மாஞ்சக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல்ராஜ் (45). வெல்டிங் வேலை செய்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தாா். அப்போது வீட்டுச் சுற்றுச்சுவரில் குதித்து வந்த ஒரு காட்டுப் பன்றி இவரை தாக்கியுள்ளது. மைக்கேல்ராஜின் அலறல் கேட்டவுடன் வீட்டிலிருந்து அவரது மனைவி மற்றும் மகன் வெளியே வந்துள்ளனா். இதற்குள் காட்டுப் பன்றி மீண்டும் சுவா் வழியாக குதித்து குலசேகரம்-திற்பரப்பு பிரதான சாலை வழியாக ஓடி மறைந்துள்ளது.
காயமடைந்த மைக்கேல்ராஜ் உறவினா்களால் மீட்கப்பட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.