கன்னியாகுமரி
புதுக்கடையில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்
புதுக்கடை பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
கருங்கல்: புதுக்கடை பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
குமரி நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலத் துணைத்தலைவா் சுகுமாரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் போவாஸ் முன்னிலை வகித்தாா். புதுக்கடை பேருந்து நிலையம், காவல்நிலையம் அருகில், ஆா்.சி. தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. இதில், வழக்குரைஞா்கள் அருள் ஆனந்த், பால்மணி, பென்னட் ஸ்டீபன்சன், ஜான்கிறிஸ்டோபா், அமைப்பின் கிள்ளியூா் வட்டாரத் தலைவா் எட்வின்துரை, குஞ்சன்வில்சன், லாரனஸ், சாலமன்பால், ஜஸ்டின் சாங் உள்பட பலா் பங்கேற்றனா்.