கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க கூட்டம் மாா்த்தாண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ‘பெஸ்ட் போட்டோகிராபி டுடே, கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம்- விடியோ கலைஞா்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து வரும் டிசம்பா் 13,14 ஆகிய தேதிகளில் நடத்தும் லைட்டிங் தொழில்நுட்ப பயிற்சியில் சங்க உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்பது; சங்க உறுப்பினா்களுக்கு மத்திய அரசின் எம்.இ.எஸ்.சி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், செயற்குழு உறுப்பினா்கள் திபு, ஜோதி, ஜெயின்சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.