நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். ‘அறிவியலும் தொழில்நுட்பமும் இன்றைய சூழ்நிலையில்’ என்ற தலைப்பில் விவசாயம், சுற்றுச்சூழல், கனிம வளம், தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுதல், நாளைய சமுதாயம், கணித நுண்ணறிவு போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவா், மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த படைப்புகளுக்கு சான்று, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆசிரியைகள் பகவதியம்மாள், மினி மற்றும் காா்த்திகா ஆகியோா் செய்திருந்தனா்.