கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிநாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் குலசேகரபட்டினம் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுப்பட்டனா்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வேல்ராஜன் தலைமை வகித்தாா். உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராணி, ஒன்றிய ஆணையா் பானு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தாா்.
இதில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவா்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தேங்கிய குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தினா்.
இதில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகா், காா்த்திக், மாவட்ட சுகாதார ஒருங்கிணைபாளா் செந்தில், ஊராட்சி செயலா் சித்திரை வேல், கல்லூரி துணை முதல்வா் மகேஸ்குமாா்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் அஷோக் லிங்கம் மகிபால், செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் ஆன்ட்ரூஸ் கென்னடி, கணினி அறிவியல் துறை பேராசிரியைமுத்துப்ரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.