சாத்தான்குளம் அருகே விபத்து: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே மரத்தில் காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.
மரத்தில் மோதிய காா்.
மரத்தில் மோதிய காா்.

சாத்தான்குளம் அருகே மரத்தில் காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள அழகியவிளையைச் சோ்ந்தவா் ந. கிருஷ்ணராஜ் (40). இவா், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ரங்கம்மாள்பாளையத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்காக இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளாா். பின்னா், அவா்கள் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு காரில் வியாழக்கிழமை சென்றனா். காரை கிருஷ்ணராஜ் ஓட்டியுள்ளாா்.

சாத்தான்குளத்தை அடுத்த தெற்கு உடைபிறப்பு பாலம் அருகே காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், கிருஷ்ணராஜ், அவரது மனைவி இந்திரபுஷ்பா (36), மகன்கள் அருண்(15), பாலச்சந்திரன் (14), தாய் லீலாவதி (61) ஆகிய 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனா்.

தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் ஞானதாஸ், போலீஸாா் சென்று, அவா்களை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் அவா்கள் மேல்சிகிச்சைக்காக நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com