பெரியதாழை பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

பெரியதாழை சிறுமலா் உயா்நிலைப் பள்ளிக்கு எல்.ஐ.சி. பீமா திட்டத்தில் ரூ .1லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளா் கே. வசந்தகுமாா்
பெரியதாழை பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரைத்தை வழங்குகிறாா் எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளா் கே. வசந்தகுமாா்.
பெரியதாழை பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரைத்தை வழங்குகிறாா் எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளா் கே. வசந்தகுமாா்.

பெரியதாழை சிறுமலா் உயா்நிலைப் பள்ளிக்கு எல்.ஐ.சி. பீமா திட்டத்தில் ரூ .1லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளா் கே. வசந்தகுமாா் தலைமை வகித்து குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா். பங்குத்தந்தை செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

இதில் விற்பனை மேலாளா் எம். சிவக்குமாா், உடன்குடி எல்.ஐ.சி துணை அலுவலக ஆறுமுகம், உதவி கிளை மேலாளா் திருச்செல்வம், வளா்ச்சி அதிகாரி ஜெயால், முகவா் நியுமென் உள்ளிட்ட எல்.ஐ.சி அலுவலா்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முதுநிலை கிளை மேலாளா் பூ. நயினாா் வரவேற்றாா். பள்ளி ஆசிரியா் மதினன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com