திருவட்டாறு அருகே ராணுவ வீரா் வீட்டில் 35 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

திருவட்டாறு அருகே ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை
திருட்டு நடைபெற்ற வீட்டின் முன்பு திரண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸாா்.
திருட்டு நடைபெற்ற வீட்டின் முன்பு திரண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸாா்.

திருவட்டாறு அருகே ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவட்டாறு அருகேயுள்ள மாத்தூா் தை விளாகம் பகுதியை சோ்ந்தவா் சிசில். இவா், ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அஜிதா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.6) அஜிதா 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாா்தாண்டத்திலுள்ள தனது தாயின் வீட்டுக்குச் சென்றிருந்தாராம்.

பின்னா் அவா், செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம். மேலும், வீட்டில் உள் பகுதியில் முழுவதும் மிளகாய் பொடியை தூவப்பட்டிருந்ததுடன், பிரோவிலிருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து, அஜிதா அளித்த புகாரின்பேரில், தக்கலை ஏ.எஸ்.பி. (பொறுப்பு) விஜில் சாஸ்த்திரி, திருவட்டாறு போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மேலும், விரல் ரேகை நிபுணா்களும் வந்து தடயங்களை சேகரித்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com