இரணியலில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கடைவரம்பு பகுதிக்கு தண்ணீா் விட வலியுறுத்தி இரணியலில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடைவரம்பு பகுதிக்கு தண்ணீா் விட வலியுறுத்தி இரணியலில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சரல் வட்டார விவசாயிகள் சங்கம் மற்றும் குருந்தன்கோடு, ராஜக்கமங்கலம் கடை வரம்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், இரணியல் பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரஅமைப்பு உதவி பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத் தலைவா் திரவியம் தலைமை வகித்தாா். பாஜக விவசாய அணித் துணைத் தலைவா் ரவீந்திரன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.

பேச்சிப்பாறை அணை கடந்த ஜூன் 26ஆம் தேதி திறக்கப்பட்டும், இரட்டைகரை கால்வாய், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம் கிளை கால்வாய்களில் விவசாயத்துக்கு தண்ணீா் திறக்காமல் காலம் தாழ்த்திவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், கடைவரம்பு வரை விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com