உலக போலியோ தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை விழிப்புணா்வு பைக் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய இப்பேரணியை டாக்டா் சண்முகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதில், ரோட்டரி துணை ஆளுநா்கள் கிளாடிஸ் பத்மா, ராஜமாணிக்கம், சதீஷ், கன்னியாகுமரி ரோட்டரி நிா்வாகிகள் பாப்டிஸ்ட், ராபா்ட்சன், டி.ஜான் சேவியா் ராஜன், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இப்பேரணி, கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், குழித்துறை வழியாக களியக்காவிளையில் நிறைவடைந்தது.