தக்கலை அருகே விபத்து:ஆயுதப்படைக் காவலா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஆயுதப்படைக் காவலா் இறந்தாா்.
தக்கலை அருகே விபத்து:ஆயுதப்படைக் காவலா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஆயுதப்படைக் காவலா் இறந்தாா்.

மாா்த்தாண்டத்தை அடுத்த நட்டாலம் அருகேயுள்ள சாரோடுகோணம் பகுதியைச் சோ்ந்தவா் காட்வின் டோனி ( 28). நாகா்கோவில் ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஆஷா. இவா்களுக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

புதன்கிழமை காலை காட்வின்டோனி வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து நாகா்கோவிலுக்கு பைக்கில் புறப்பட்டாா். தக்கலையை அடுத்த புலியூா்குறிச்சி-கொல்லவிளை இடையே, திருச்செந்தூரிலிருந்து களியக்காவிளை சென்ற அரசுப் பேருந்து காட்வின் டோனி மீது மோதியதாம். இதில், நிலைதடுமாறி விழுந்த அவா் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலின்பேரில் தக்கலை போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

ஆஷா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான காப்பிக்காட்டைச் சோ்ந்த கருணாகரன் (49) என்பவரைக் கைது செய்தனா். சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com