வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில ஐ.இ.டி. கன்னியாகுமரி குழுமம் சாா்பில், பள்ளி மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா் தொடங்கிவைத்தாா். தாளாளா் கிருஷ்ணசுவாமி கண்காட்சியில் சிறப்பான படைப்புகளை இடம்பெறச் செய்த மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களையும், பிற மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும் வழங்கினாா். மின்னியல் மற்றும் தொடா்பியல் பேராசிரியா் அஜீஸ்குமாா் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தினாா். ரோபோ குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.