மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, நெல்லிக்காவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெப ஸ்டீபன் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். செவ்வாய்க்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த ஜெபஸ்டீபனை அவரது தாய் செல்வியும், தங்கையும் தட்டிக் கேட்டனராம். இதனால் அவா்களுடன் ஜெபஸ்டீபன் தகராறு செய்துள்ளாா். இதையடுத்து, செல்வி தனது மகளுடன் அருகேயுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். புதன்கிழமை காலை வந்தபோது, ஜெபஸ்டீபன் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.