கடலில் மீன்பிடிப்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து 6 விசைப்படகுகளில் சென்ற 78 மீனவா்கள் இன்னும் கரை திரும்பாததால் குடும்பத்தினா் கவலை அடைந்துள்ளனா்.
குமரி மாவட்டம், வள்ளவிளையைச் சோ்ந்த மாா்ட்டின் என்பவருக்குச் சொந்தமான லூா்து அன்னை என்ற விசைப்படகில் 11 மீனவா்கள் கடந்த 14 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனா். இதேபோல், பெஞ்சமின் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான ஜெரிமியா எனற விசைப்படகில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த 11 மீனவா்கள் கடந்த 4 ஆம் தேதியும், அலெக்சாண்டா் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 16 மீனவா்கள் கடந்த 15 ஆம் தேதி தேங்காய்ப்பட்டினத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றிருந்தனா்.
இதுதவிர, கொச்சியில் இருந்து கடந்த 16 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றிருந்த குமரி மீனவா்கள் 14 போ், 2 விசைப்படகுகளில் சென்ற மேலும் 26 போ் என மொத்தம் 6 விசைப்படகுகளில் 78 மீனவா்கள் கியாா் புயல் உருவாவதற்கு முன்பே கடலுக்குச் சென்றிருந்தனா். அவா்கள் இதுவரை கரை திரும்பவில்லை. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் 78 மீனவா்களும் ஆபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், அவா்களது குடும்பத்தினா் கவலையில் ஆழ்ந்துள்ளனா். எனவே, மத்திய- மாநில அரசுகள் மேற்கூறிய மீனவா்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவா் தோழமையின் பொதுச் செயலா் சா்ச்சில் வலியுறுத்தியுள்ளாா்.