திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ராமாயண பாராயணம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அன்ன பூரணி சேவா அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று ராமாயண பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரு ஓணம் தினமான புதன்கிழமை சிறப்பு ராமாயண பாராயணம் நடைபெற்றது. இதையொட்டி, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து, ராமாயண பாராயணம் தொடங்கியது. இதில், சுவாமி உதித் சைதன்யஜி விளக்கவுரை நிகழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆசி வழங்குதல், அன்னதானம், மாலையில் லலிதா சஹஸ்ரநாமம், அர்ச்சனை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் ஸ்ரீராம பட்டாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.