திக்கணங்கோடு அருகே பள்ளத்தில் விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் இறந்தார்.
திக்கணங்கோடு அருகேயுள்ள தெங்கன்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன் (57). கட்டடத் தொழிலாளி. இவர், ஓணம் பண்டிகையையொட்டி தன் மகளைப் பார்க்க ராஜாக்கமங்கலம் சென்றுவிட்டு, புதன்கிழமை மாலை தெங்கன்குழி வந்தார். அங்கிருந்து தனது வீட்டுக்குச் செல்லும்போது, தடுமாறி பள்ளத்தில் விழுந்ததாராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். ராயப்பனின் மனைவி ரத்னபாய் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.