ரேஷன் கடைகளை மூட முயற்சிப்பதாக கூறி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சிபிஐ எம்எல் பிரசார இயக்கத்தினர் தக்கலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். சிபிஐ எம்எல் மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து, ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலர் ஜான்சன், கல்குளம் வட்ட பொதுச் செயலர் அருண்டேவிட், மாவட்டச் செயலர் தேவஅருள்ரவி, கல்குளம் வட்டத் தலைவர் அர்ஜூனன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
இதில், நிர்வாகிகள் ஜெமிலாஜெனட், லதா, கார்மல், ஆக்னஸ், முத்துகுமார், கணபதி, பாலன், சுனில்குமார், ஜேசராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.