கிள்ளியூர் ஒன்றிய திருவருட் பேரவை கூட்டம் கருங்கல்லில் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் பிரசாத்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஜேம்ஸ் ஆர் டேனியல், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் சாந்தகுமார், சமக மாவட்ட மகளிரணிச் செயலர் சோபிதராணி, குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் கென்னடி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின்சிறில், ஜெகன், குமரேசன், வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.