சுசீந்திரம் இயல், இசை, நாடக சங்கத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா, ஆன்மிக மற்றும் கலை இலக்கிய விழா திங்கள்கிழமை (செப். 23) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (செப். 23) மாலை 5 மணிக்கு நாஞ்சில் என்.கே. ராமதாஸ் குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி எல்.வாசுகி மனோகரன் தலைமையில் சிறப்பு சுழலும் சொல்லரங்கம் நடைபெறுகிறது.
செப். 24, 25ஆம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு சேலம் ருக்மணி ஆன்மிகச் சொற்பொழிவாற்றுகிறார்.
ஏற்பாடுகளை சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடகச் சங்கத்தினர் செய்துள்ளனர்.