வாக்காளர்கள் செல்லிடப்பேசி "ஆப்' மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முகாம் குலசேகரத்தில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக செல்லிடப்பேசி "ஆப்' எனப்படும் செயலி மூலம் தகவல்களை திருத்தும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமில் திருவட்டாறு வட்டாட்சியர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்து விளக்கம் அளித்தார்.