ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
அண்ணா பல்கலைக்கழக 19ஆவது மண்டலத்திற்கான இப்போட்டிகள், தொடக்க நிகழ்ச்சிக்கு, மரியா கல்விக் குழுமத் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்தார். மரியா பொறியியல் கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் வாழ்த்திப் பேசினார். 15 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் லயோலா கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது. ஏற்பாடுகளை மரியா பொறியியல் கல்லூரி விளையாட்டுத் துறைத் தலைவர் ரெஜூலால் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.