கருங்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி

கருங்கல் அருகேயுள்ள சுண்டவிளை பகுதியில் தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். 


கருங்கல் அருகேயுள்ள சுண்டவிளை பகுதியில் தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். 
மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (31). கூலித் தொழிலாளி. இவர், வெள்ளிக்கிழமை இரவில் தனது நண்பருடைய மோட்டார் சைக்கிளில் வெள்ளியாவிளை பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றாராம். சுண்டவிளை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரமாக குவித்து வைத்திருந்த ஜல்லி கல்லில் ஏறி அங்கிருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சுனிலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர்  அவரை மீட்டு உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவர் இறந்தார். இதுகுறித்து, புகாரின்பேரில், கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com