நாகர்கோவில் அருகே பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் ஈத்தாமொழியை அடுத்த புதூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ராஜாக்கமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் அஜ்மல்ஜெனிப், தலைமைகாவலர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பாழடைந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 37 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.