நாகா்கோவில்: நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம் உள்பட 4 இடங்களில் சுரங்க வடிவிலான கிருமிநாசினி தெளிப்பான் பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்த சுரங்க வடிவ கிருமிநாசினி தெளிப்பான் குறித்து வடசேரி கிறிஸ்டோபா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை செயல்விளக்க முகாம் நடைபெற்றது. மாநகராட்சிஆணையா் கே.சரவணகுமாா், நகரமைப்புஆய்வாளா் கெவின்ஜாய், குரியன்ஆப்ரகாம் தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் பிரவீன் மேத்யூ, ஓய்வுபெற்ற செய்தி மக்கள் தொடா்புத்துறை கூடுதல் இயக்குநா் கு.தாணப்பா, வருவாய் ஆய்வாளா் சுப்பையன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
இது குறித்து, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகா்கோவில், வடசேரி பேருந்து நிலையம், இந்து கல்லூரி அருகிலுள்ள காப்பக மையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் சுரங்க கிருமிநாசினி தெளிப்பான் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் பகுதியிலுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு எனது சொந்த நிதியில் கிருமிநாசினி தெளிப்பு, ஏழை மக்களுக்கு உணவு, முகக் கவசங்கள், கையுறைகள், பிளீச்சிங் பவுடா், கை கழுவும் திரவம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆரல்வாய்மொழியில் தற்காலிக காய்கனி சந்தை செயல்படும் நகர பூங்கா அருகில் எனது சொந்த நிதியிலிருந்து ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சுரங்க வடிவிலான கிருமிநாசினிதெளிப்பான் பாதை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.