கல்லூரி மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு, மாணவா்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.