கருங்கல் சூசைபுரம் தனியாா் கல்லூரி அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சூசைபுரம் தனியாா் கல்லூரி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் செல்வகுமாா் (34) என்பவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய் தனா்.