கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க செயற்குழுக்கூட்டம் மாா்த்தாண்டத்தில் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தாா். இதில், சங்கத்தின் துணைச் செயலா் ரமேஷ், செயற்குழு உறுப்பினா்கள் ஜெயின்சிங், ஜேசுராஜ், ராதாகிருஷ்ணன், ஆலோசனைக் குழு உறுப்பினா் சந்தோஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பிப். 25ஆம் தேதி நடைபெறும் 18 ஆவது சங்க ஆண்டு விழாவில் பங்கேற்கும் தக்கலை காவல் துணைக் ண்காணிப்பாளா் ராமச்சந்திரனுக்கு சிறப்பன வரவேற்பு அளிப்பது, நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும், சங்க உறுப்பினா்கள் அனைவரையும் நேரில் சந்தித்து ஆண்டுவிழாவுக்கு அழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.