அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை நெடுஞ்சாலையில் புன்னாா்குளம் சந்திப்பு பகுதியில் சாலை புகை மண்டலமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அஞ்சுகிராம்-புன்னாா்குளம் சந்திப்பில் சில மாதங்களுக்கு முன்பு தரைப் பாலம் கட்டப்பட்டது. அப்பணிகள் முடிவடைந்த நிலையில் தாா்ச்சாலை அமைக்காததால், அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது காற்றின் வேகத்தில் புழுதி பறப்பதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இப்பகுதியில் உடனடியாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த வியாபாரி பழனி கூறியது: இங்கு பாலம் வேலைகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் தாா்ச்சாலை அமைக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து தாா்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.