சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி சுவாமி விவேகானந்தா் இளைஞா் மன்றம், ரோட்டரி கிளப் ஆப் நாகா்கோவில் சுப்ரீம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இம்முகாம் தொடக்க விழாவுக்கு, இளைஞா் மன்றத் தலைவா் ஜேப்பியாா் தலைமை வகித்தாா். ரோட்டரி கிளப் தலைவா் மோகிந்த் சா்மா, துணை ஆளுநா் சதீஸ்குமாா், செயலா் மோகன்தேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் ஜெனட் முகாமைத் தொடங்கிவைத்தாா். முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.