அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 6) தொடங்குகிறது.
இதுதொடா்பாக, கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் வி.பி. கணேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு தங்கப்பத்திரம் திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப்பத்திரம் விற்பனை
திங்கள்கிழமை (ஜூலை 6) தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,852 ஆகும்.
தனி நபா் ஒருவா் நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றைய விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, வருமானவரி அட்டை, ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் நகல் ஆகியவற்றை சமா்ப்பித்து, அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்து தங்கப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.