சாமிதோப்பில் நாடாா் மக்கள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில கொள்கைப் பரப்பு செயலா் சுபாஷ் நாடாா் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் விஷ்ணுகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையும், பிற மாவட்டங்களில் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையும் நாடாா் சமுதாய வாக்காளா்கள் உள்ளனா். எனவே அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளா் சுயம்புலிங்கம் வரவேற்றாா்.ஜெயகுமாா் நன்றி கூறினாா்.