கரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாகா்கோவில் நகரில் பெரிய கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையபகுதி, செம்மாங்குடி சாலை ஆகிய பகுதிகளில் கோட்டாட்சியா் அ.மயில், மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கு செயல்பட்டுவரும் ஜவுளிக் கடைகள், நகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தனா். இதில் அந்த கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா விழிப்புணா்வு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், 10 ஊழியா்களுக்கு மேல் பணியாற்றும் பெரிய கடைகளை மூடுமாறு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.