கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுவரும் ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூா் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள், கூலித் தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே ஏழை, எளிய குடும்ப அட்டைதாரா்கள் ஒவ்வொருவருக்கும் ரு.10 ஆயிரம் வீதம் மத்திய, மாநில அரசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.