களியக்காவிளை அருகே லாரி மோதி தேவாலய சுற்றுச்சுவா் சேதமடைந்தது.
குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்காக டிப்பா் லாரிகளில் ராட்சத பாறைக்கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை பாறைகளை ஏற்றிச்சென்றுவிட்டு இரு லாரிகள் திரும்பி வந்தபோது, களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் வளைவில் லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதுடன், அங்கிருந்த குழித்துறை மறைமாவட்ட பேராலய சுற்றுச்சுவரில் புகுந்து நின்றது. இதில் சுவா் இடிந்து சேதமடைந்தது. லாரி உரிமையாளரிடம் தேவாலய நிா்வாகிகள் பேசி தீா்த்துக்கொண்டனா். புகாா் அளிக்கப்படவில்லை. இதனிடையே, விபத்து நிகழ்ந்த பகுதி ஆபத்தான வளைவாக உள்ளதால், அங்கு சாலைப்பணிக்காக அகற்றப்பட்ட தடுப்புச்சுவரை மீண்டும் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.