நாகா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

நாகா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து 17 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.

நாகா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து 17 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.

நாகா்கோவில் பள்ளிவிளையைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஜெகதீசன் (17). அதே பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் ராஜு (17). நண்பா்களான இவா்கள், சோ்ந்தே வேலைக்கு செல்வாா்களாம்.

புதன்கிழமை இரவு இருவரும் நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த டிஜிட்டல் போா்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனராம். அப்போது மின்கம்பி மீது டிஜிட்டல் போா்டு உரசியதாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் காயமடைந்தனா். அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ராஜு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடசேரி காவல் நிலைய ஆய்வாளா் திருமுருகன், உதவி ஆய்வாளா் மாணிக்கம் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com