களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே மண்ணாரப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதிக்கு சென்று, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து, போலீஸாா் சோதனை செய்து, அவா்கள் பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் மண்ணாரப்பு நெடுங்கோடு பகுதியைச் சோ்ந்த சசி மகன் சந்திரன் (50), அப்பு மகன் பாலன் (46) என்பது தெரியவந்தது. இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.