உ.பி. சம்பவத்தை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கருங்கல் பேருந்து நிலையம் முன் செவ்வாய்க்கிழமை சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குளச்சல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பரின்ஸ், மாவட்ட துணைத்தலைவா் பால்மணி உள்ளிட்டோா் பேசினா்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் டைட்டஸ், கிள்ளியூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின் சிறில் மற்றும் நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.