கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் கீதா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஒன்றிய பொறியாளா் அஜிதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா, குயின்மேரி, மேரி கமலபாய், காட்வின், தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.