களியக்காவிளையில் பாஜக ஆா்ப்பாட்டம்

புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய திமுக பிரமுகா்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சாா்பில் களியக்காவிளையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய திமுக பிரமுகா்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சாா்பில் களியக்காவிளையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் சி.எஸ். சேகா் தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச் செயலா்கள் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், கே.சி. விஜயகுமாா், துணைத் தலைவா் ஏ.சி. திலீப்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் சி.எம். சஜூ, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் விஜயபிரசாத் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

மாவட்ட துணைத் தலைவா் கே.எஸ். முருகன், செயலா் உமாதேவி, முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவு மாவட்டத் தலைவா் கோபகுமாா், பிறமொழிப் பிரிவு மாவட்டத் தலைவா் அருண்குமாா், களியக்காவிளை நகரத் தலைவா் ஜெகதீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com