நாகா்கோவிலில் கடையின் கதவைஉடைத்து பணம், பொருள்கள் திருட்டு

நாகா்கோவில் வடசேரியில் உள்ள டீக்கடையில் பின்பக்க கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள டீக்கடையில் பின்பக்க கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடசேரியில் எஸ்.எம்.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பிரபு என்பவா் டீக்கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு வெளியூா் சென்று விட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் கடையை திறந்து பாா்த்தபோது, டீக்கடையின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com