நாகா்கோவில், செப்.18: குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் மாணவா்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவா்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
முதுகலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.