குமரியில் பணம் கேட்டு மிரட்டல்: சென்னையைச் சோ்ந்த மூவா் கைது

கன்னியாகுமரியில் ஹோட்டலில் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சென்னையைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரியில் ஹோட்டலில் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சென்னையைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புதன்கிழமை இரவு 3 போ் புகுந்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்தனராம்.

இதுதொடா்பாக ஹோட்டல் மேலாளா் அளித்த தகவலின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் சென்று, 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் சென்னையைச் சோ்ந்த ஆகாஷ் (20), கிருஷ்ணன் (21), ஹாரிஸ் (18) என்பதும், பல்வேறு வழிப்பறிகளில் தொடா்புடையோா் என்பதும், கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com