குமரியில் மேலும் 86 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில், செப்.25: குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,225 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1,62, 563 போ் கரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையம் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 895 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 11 வெள்ளிக்கிழமை குணமானகினா். இதையடுத்து,

மாவட்டத்தில் 11,113 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது ஆகிய காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை 98 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 21, 400 வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com