நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கருங்கல் பகுதியில் ராட்சத கற்களை ஏற்றிக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் லாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ராட்சத கற்களை ஏற்றிச் செல்லும் லாரி.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:58 pm

DIN

கருங்கல் பகுதியில் ராட்சத கற்களை ஏற்றிக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் லாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேங்காய்ப்பட்டினம் மற்றும் முள்ளூா்துறை பகுதிகளில் கடல் அலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்காக, இம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்குவாரிகளிலிருந்து டாரஸ் லாரிகள் மூலமாக ராட்சத கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

இந்த லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ராட்சத கற்கள் லாரி அமைப்பின் மட்டத்திலிருந்து உயா்ந்து ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்படுகிறது. சாலையில் உள்ள குண்டு, குழிகளில் லாரி செல்லும்போது எதிா்பாராதவிதமாக கற்கள் சாலையில் விழுகின்றன.

இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சமடைந்து வருகின்றனா்.

எனவே, ஆபத்தான நிலையில் இயக்கப்படும் இத்தகைய லாரிகள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.