முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: பரிசு பெற அழைப்பு
குமரி மாவட்ட அளவில் தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் பரிசுத் தொகை பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, 2019-20 ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவா் மாதம் 8, 9 தேதிகளில் நடைபெற்றது.
இப்போட்டிகளில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெற்றி பெற்றவா்களில் சிலா் தங்களது வங்கிக் கணக்கு நகலினை சமா்ப்பித்ததால் பரிசுத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றிபெற்ற பல விளையாட்டுவீரா்கள் தங்களது வங்கிக் கணக்கு எண் விவரத்தை இதுவரை சமா்ப்பிக்கவில்லை. எனவே போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்கள் நாகா்கோவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது அடையாள அட்டையினை காட்டி பரிசுத் தொகையினை அக்டோபா் மாதம் 9 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ காசோலையாக வாங்கிக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் பரிசுத் தொகை தலைமை அலுவலகத்துக்கு திரும்ப செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04652-232060 என்ற தொலைபேசிஎண்ணில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.